இதை தட்டச்சு செய்யும் போது நேரம் சரியாக 2.30 am
இன்று புனித வெள்ளி அதனால் விடுமுறை சனி ஞாயிறு வார விடுமுறை மொத்தம் மூன்று நாள் விடுமுறை அதனால் நானும் நண்பர் வால்பையனும் இரண்டு நாள் பயணமாக பெங்களூர் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.முதலில் இணையத்தில் முன்பதிவு செய்தோம்.திரும்பி ஞாயிறு காலை வருவதாக முடிவு செய்து.பின்பு போவதற்கும் சேர்த்து முன்பதிவு செய்துவிட்டேன்.
அப்புறமாக வெள்ளிக்கிழமை நேரமாக கோலார் முடித்துவிட்டு பின்பு மதியத்திருக்கு மேல் பெங்களூர் முடித்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு அடுத்தநாள் உடுப்பி அல்லது பெல்காம் சென்று திரும்பலாம் என்று முடிவு.அதனால் முதலில் ஞாயிறு பயணச் சீட்டை ரத்து செய்தேன்.அந்த பணமும் என் வங்கிக்கணக்கில் இதுவரை வந்து சேரவில்லை.சரி வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
12.30am க்கு மழை வேறு அதிலேய கிளம்பி தொடர்வண்டி நிலையம் வந்துசேர்ந்தோம்.
இந்த வால்பையன் வேறு சரக்கில் இருந்தார்.1 am மணிக்கு வண்டி முதலாவது பிளாட்பாரத்தில் வண்டி வருமன்று காத்திருந்தோம்.அதற்குள் தலைவருக்கு போன் வேறு வந்துவிட்டது.நான் கேட்டுட்டு வரன்னதுக்கும் வேணாம்னு சொல்லிட்டார்.எனக்கு சந்தேகம் அதனால் என்கொயரியில் விசாரித்ததில் வண்டி இப்போதுதான் இரண்டாவது பிளாட்பாரத்தில் கிளம்பியதாக சொன்னார்.
வந்து தலைவரை கூப்பிட்டேன் வீட்டுக்கு போலாம்னு.அவரு நம்பலை.அவர்களிடம் சென்று சண்டை வேறு ஒன்னாவது ப்லட்பாரதுல வரும்னு சொல்லிடு.இப்போ இரண்டவதுல போயிடுச்சுன்னு சொல்லுறதா எதுக்கமுடியதுன்னு சண்ட வேற.சரி விடுங்க பின்னாடி வர ராஜ்கோட் வண்டிய புடிச்சு போயிடலாம்னார்.நான் தா ஆணியே புடுங்க வேண்டாம். புடுங்குனது போதுன்னு திரும்பிட்டேன்.பயணச்சீட்ட ரத்து பண்ணலாம்னு வந்து பாத்த இந்த irctc காரங்க இரவு 11.30pm மணியோட அவ்வளவுதான் காலைல பாருனுட்டான்.கடைசியா சதர்ன் ரயில்வேவுக்கு தானம் கொடுத்ததுதான் மிச்சம்.
இதுலையும் ஒரு மீதி இருக்கு அங்க எப்படியும் பப்புல போயி பண்ணுற செலவு மீதிதான்.
ஏன்னா அடுத்தவாரம் போகும்போது இந்த தெண்டசெலவ சரிகட்ட அந்த செல்வ கட்ப்பண்ணிருவோம்ள.சரி இன்று பங்குனி உத்திரம் ஆதலால் இன்று ஊரிலேயே கொண்டாடுவோம் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்.சரக்கடித்தவருடன் பயணிக்கும் போது மற்றொருவர் தூங்கி வளியாமல் விளிப்போடிருப்பது நலம்.
4 பின்னூட்டம்:
சில அனுபவங்களுக்காக செலவு கொஞ்சம் அதிகமாத்தான் பண்றமோ,
ஆனாலும் அடுத்த தடவ பப் கட்டுன்னு குண்ட தூக்கி போட்டுடிங்க்களே பாஸ்
வால்பையன்
:) Nalla anupavam thaan
vaanga thala
Post a Comment