தமிழுக்கு அமுதென்று பேர்




எனக்கு மிகவும் பிடத்த பாடல்களில் இதுவும் ஒன்று.எனது சிறுவயதில்
சென்னை தொலைக்காட்சில் வந்த ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் இந்தப்பாடல்ஒளிபரப்பாக கேட்பேன்.பாவேந்தரின் இவ்வரிகள் எனது பாடத்தில் வந்ததால்இப்பாடல் வரிகள் எனது மனதில் எளிதாக பதிந்தது.



தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


-பாவேந்தர் பாரதிதாசன்

நன்றி தமிழ்நெஞ்சம்

ஆணிவேர்

ஆணிவேர்



எங்களது உயிர்கள் எடுக்கப்படும் கணப்பொழுதுகளில் என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..? ஓர் அழகிய பாடலின் ஆரம்ப வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

ஆணிவேர் படம் பண்புடனில் நண்பர் அளித்த சுட்டி.இப்படம் ஈழத்தில் கிளிநொச்சி பகுதில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டது.நமது தமிழ் நடிகர்களான நந்தாவும் மதுமிதாவும் நடித்த படம்.இப்படம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.தடை செய்வதற்கான காரணம் ஏதும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

Double Click on the Video Player to view fullscreen. PART 01 - 03













download link PART 01
PART 02
PART 03

Visit the Site