உலக சினிமா என்றொன்று இருப்பதே ஆவியில் செழியன் எழுதி வெளிவந்த உலக சினிமா படித்த பிறகே அப்படி ஒரு சினிமா உலகம் இருப்பதே எனக்குத்தெரியும் அந்த வரிசையில் நேற்று நான் பார்த்த படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன்.அந்த தொடரில் நான் முதன் முதலில் வாசித்தது இந்தப்படம் தான்.அன்றிலிருந்து இப்படத்தை வாங்குவதருக்கு முயற்சி செய்தேன்.இப்போது தான் கிடைத்தது.

சிறிய குழந்தைகளுக்கான பழைய சூவை ஒரு முதியவர் தைத்தபடியே காட்சி ஆரம்பம் ஆகிறது.அந்த சூவை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்கிக்கிகொண்டு வீட்டுக்கு செல்கையில் சூ தொலைந்துவிடுகிறது.காய்கறிக்கடையில் பழைய குப்பை எடுப்பவர் தவறுதலாக சூவையும் எடுத்து சென்றுவிடுகிறார்.சிறுவன் அலி சூ இல்லாமல் வீடுவந்து சேர்கிறான்.வீட்டில் உடல் நலம் சரியில்லாத அவனது தாய் வாடகை மற்றும் மளிகை கடை சரியான தொழில் இல்லாத அவனது தந்தை. சூ வாங்க முடியாத மோசமான சூழ்நிலையில் அவனது குடும்பம்.

அலியின் தங்கை ஜாரா நாளை பள்ளிக்கு தான் சூவணிந்து செல்லவேண்டும் என்பாள்.அதனால் தனக்கு சூவைத்தரும் படி வேண்டுவாள் இல்லாவிட்டால் தந்தையிடம் சொல்லுவதாக சொல்லுவாள்.அலி தனது குடும்பச்சூழ்நிலையை விளக்கி தனது சூவை அணிந்துகொண்டு பள்ளிக்கு செல்லுமாறு கூறுவான்.அப்பாவிற்கு தெரியாமல் இருவரும் நோட்டில் எழுதி எழுதி பேசிக்கொள்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

காலையில் ஜாரா அலியின் சூவை அணிந்த்துகொண்டு பள்ளிக்கு செல்வாள்.மதியம் ஓடோடிவந்து அண்ணனுக்கு தருவாள்.பாதிவழியில் நிற்க்கும் அலி சூவை பெற்றுக்குகொண்டு பள்ளிக்கு ஓடுவான்.
அதனால் அவன் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்ப்படும்.முதல்நாள் தாமதமாக வருவதை அவனது தலைமை ஆசிரியர் பார்ப்பார் விட்டுவிடுவார்.ஒருநாள் ஜாரா பள்ளி விட்டுத்திரும்பும் போது சூ தவறுதலாக சாக்கடையில் விழுந்துவிடும்.அதை எடுக்கமுடியாமல் தவிப்பாள்.அதை பார்க்கும் ஒரு பெரியவர் அவளுக்கு உதவுவார்.சூவை எடுத்துக்கொண்டு போய் அலியிடம் சேர்ப்பாள்.இதன் காரணமாக பள்ளிக்கு தாமதமாக செல்லும் அலி தலைமை ஆசிரியரிடம் மாட்டிக்கொள்வான்.சூ ஈரமாக இருப்பதற்கான காரணங்களை கேட்டுவிட்டு இனிமேல் தாமதமாக வரக்கூடாது என்று சொல்லி அனுப்புவார்.

பள்ளியில் அலி நன்றாக படித்ததற்காக அவனுக்கு அவன் வகுப்பாசிரியர் ஒரு பேனா பரிசளிப்பார்.அதை தனது தங்கை ஜாராவுக்கு அளிப்பான் அலி.ஜாராவின் சக பள்ளி மாணவி தன்னுடைய சூவை அணிந்த்திருப்பதை பார்க்கிறாள்.அந்த சூவை பார்த்துக்கொண்டே அவளை பின்பற்றி அவளது வீடுவரை சென்றுவிட்டு திரும்புவாள்.அதனால் அலி பள்ளி செல்வதில் தாமதம் ஏற்ப்படும்.மீண்டும் தலைமையாசிரியரிடம் மாட்டிக்கொள்வான்.இந்த முறை அவனை வெளியே அனுப்பிவிடுவார் அப்போது அங்கு வரும் அவனது வகுப்பாசிரியர் அவானுக்காக பரிந்து பேசி அழைத்துப்போவார்.

ஜாரா அண்ணன் அலியை அழைத்துக்கொண்டு தன்னுடன்பயிலும் மாணவியின் வீட்டுக்கு அலைத்துப்போவாள்.அவர்கள் ஒளிந்திருந்து அவள் வீடையே பார்த்துக்கொண்டிரிருப்பார்கள்.அப்போது பார்வையற்ற தன் தந்தையை அழைத்துக்கொண்டு வியாபரத்திருக்கு வெளியே கிளம்புவாள்.அந்தக் காட்சியை பார்த்த இருவரும் ஒன்றும் பேசாமல் வீடு திரும்புவர்.

ஒருநாள் வெள்ளிக்கிழமை ஏதாவது தோட்ட வேலை கிடைக்கிறதா என்று பணக்கார்கள் வசிக்கும் பகுதிக்குள் அலியும் அவன் தந்தையும் வேலை தேடுகிறார்கள்.ஒரு வேலையும் கிடைக்காத சமயத்தில் அலியின் சாமர்த்தியத்தால் ஒரு வீட்டில் வேலை கிடைக்கிறது.அவர் எதிர்பாராத அளவு பணமும் கிடைக்கிறது.வீட்டிற்க்கு போகும் வழியில் தந்தை சைக்கிளை மித்த்தபடி பல கனவுகளுடன் செல்கிறார்.வீட்டுக்கு தேவையான பொருட்களை பட்டியலிடுகிறார்.சைக்கிளின் முன் தண்டில் அமர்ந்திருக்கும் அலி அதைக்கேட்டுக்கொண்டே அப்படியே தங்கை ஜாராவுக்கும் ஒரு சூ வாங்க வேண்டும் என்கிறான்.சரி என்றபடியே ஒரு இறக்கத்தில் சைக்கிளில் வேகமாக செல்கிறார்.அப்போது எதிர்பாராத விதமாக பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி இருவரும் கீழே விழ இருவரும் சோகமாக வீடு திரும்புகிறார்கள்.

அண்ணன் அலி பரிசாக அளித்த அந்த தங்க நிரப்பேனவை கீழே தவற விடுவாள் ஜாரா
அதை அந்த ஜாராவின் சூவை அணித்துள்ள பெண் எடுத்துக்கொடுப்பால்.அதிலிருந்து இருவரும் நட்ப்பாகிவிடுவர்.ஒருநாள் புது சூவுடன் வரும் அவளைப்பார்த்து எங்க அந்த பழைய சூ என்று அவள் புது சூவை பார்த்தபடி கேட்பாள்.அவளும் பழையது தன்னிடம் இல்லையென்றும் தனது தந்தை புதிதாக வாங்கித்தந்ததைப்பற்றி கூறும்போதே ஜாரா கோவமுடன் அங்கிருந்து விலகுவதை காரணம் புரியாமல் மலங்கமலங்க விழித்தபடி பார்த்து நிற்ப்பாள் அந்தச்சிறுமி.

பள்ளிகளில் அளவில் நடக்கும் ஒரு மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதாகவும் அதில் தான் மூன்றாம் இடம் பெறுவதாகவும் தன் தங்கையிடம் கூறுவான் அலி.ஏன் மூன்றாம் இடம் என்றதற்கு அந்த இடத்திருக்குத்தான் ஒரு ஜோடி சூக்கள் பரிசு என்பதால் தான் மூன்றாம் இடம் வரப்போவதாக உறுதியளிக்கிறான்.அடுத்தநாள் ஓட்டப்பந்தையத்தில் அலிஒடத்துவங்குகிறான்.அப்போது ஜாரா தன் அண்ணனுக்காக சூவுடன் ஜாரா ஓடிவருவது போல பின்னணியில் இசை ஒலிக்கப்படுகிறது.அலிக்கும் ஜாராவுக்கும் நடக்கும் உரையாடல்கள் அவன் நினைவில் வந்துதுவந்து போகிறது.வெற்றிக்கோட்டை நோக்கி சக மாணவர்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறான்.

முடிவில் அலி போட்டியில் தான் நினைத்த மூன்றாவது இடத்தை அடைந்தான இல்லையா என்பதை வெகு அற்ப்புதமாக காட்சியாக்கப்பட்டிருக்கும்.அலி மற்றும் ஜாராவாக நடித்த சிறுவர்கள் இருவரும் அக்கதா பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினார்கள் என்றே கூறவேண்டும்.இரான் என்றால் செல்வச்செழிப்பான நாடு அங்கு ஏழைகளே இருக்க வாய்ப்பில்லை என்றெண்ணிய என்போன்றவர்களின் எண்ணத்தை தகர்த்தெறியும் படம்.அந்நாட்டில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் நிலையை காட்சிகளினூடே மெல்லிய இசையுடன் தெளிவாக சொல்லிஇருப்பார் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி.

இப்படத்தை பெற விரும்புவோர் 9841898145 கௌத் என்பவரை தொடர்புகொள்ளவும்.பீச் ஸ்டேஷன் அருகில் இவரது கடையுள்ளது.இவரிடம் அனைத்து உலக சினிமாவும் கிடைக்கிறது.ஈரோட்டில் இருப்பவர்கள் நந்து அண்ணாவை தொடர்புகொள்ளவும்.அவரது நண்பர் மாதம் ஒருமுறை ஒரு படம் திரையிடுகிறார்.அதற்காக வருட சந்தாவகா ஒரு சிறிய கட்டணம் நிர்னைத்திருக்கிறார்.விருப்பமுள்ளவர்கள் அதில் உறுப்பினர் ஆகலாம்.

நான் ரசிக்கும் சில சினிமா பற்றிய பதிவுகள்; அய்யனார்,மோகன்தாஸ்,பிரவீன், மதி ,லேகா........

சமீபத்தில் கேட்ட பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

திரைப்படம்:சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரை



கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லயே இதில் ஓசை இல்லயே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறோர் நினைவில்லை
இனி இந்த ஊணுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வாழ‌

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லயே இதில் ஓசை இல்லயே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே.

நன்றி.
பண்புடன்

இந்த மாசம் PIT க்கு நம்ம படம்





இது ஈரோடு புகழ் காங்கயம் காளையை போற்றும் விதமாக அமைக்கப்பட்ட சிலை.
எங்க ஊரு ரயில் நிலையம் அருகில் உள்ளது.தினமும் இதை கடந்துதான் நாங்கள் போய்வரவேண்டும்.

Visit the Site