சசி வாரியார் எனும் மலையாள எழுத்தர் பிரிதா என்ற தோழியின் உதவியோடு தமிழரான ஜனார்த்தனன் பிள்ளை எனும் தூகிலிடுபவரின் சுயசரிதையை முதலில் அவரது வாய் வழியாகவும் பின் அவராலேயே எழுதப்பெற்றும் ஆங்கிலத்தில் வெளியான நூல் Hangman's Journal.இதை இரா.முருகவேள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.ஏற்கனவே இவரது பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்,எரியும் பனிக்காடு போன்ற இவரது இரு மொழிபெயர்ப்பு நாவல்கள் வாசித்துள்ளதால் இந்நாவலையும் வாசிக்கும் ஆவலை மேலும் தூண்டியது.




இறப்பு என்பது எப்படி இருக்கும்.இறப்பை பற்றி சில பல கதைகள் இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.முப்பதாண்டுகாலம் தூக்கிலிடுபவராக திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும்,விடுதலைக்குக்கு பிந்தைய இந்தியாவிலும் ஆரட்சர்ராக பணியாற்றியவர்.மொத்தம் 117 பேரை துக்கிலேற்றியிருக்கிறார்.அவரது அனுபவத்தை சசி வாரியார் புத்தகமாக கொண்டுவந்திருக்கிறார்(ஏனோ தமிழில் அது பற்றி யாரும் சிந்திக்கவில்லை).

தூக்கு தண்டனை அனுபவிப்பவரை விட அதை நிறைவேற்றுபவரின் மனத்துயரத்தையும் அவர்கள் அனுபவித்த குற்றவுணர்ச்சியையும்,சமூகத்தில் மற்றும் சக பணியாளர்களுடன் அவர்கள் நடத்தப்பட்ட விதம் பற்றியும் ஜனார்த்தனம் பிள்ளை நம்மிடையே பகிர்கிறார்.அவர் தான் முடித்த வேலைகளெல்லாம் மன்னரின் பெயரால் நிறைவேற்றப்பட்டது மன்னரோ கடவுளின் பெயரால் ஆணையிடுகிறார்.எனவே கடவுளின் பெயராலையே தான் இவ்வேலையை செய்வதாக அவர் தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

அவரது தந்தைக்கு பின் அவர் இந்த வேலையை ஏற்று செய்திருக்கிறார்.தனது குடும்பத்திருக்காக அவர் இந்த வேலைக்கு போயிருக்கிறார்.நாட்டில் பஞ்சம் பசி எது நேர்ந்த போதிலும் இவருக்குண்டான சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.தூக்கிலிடப்படும் நபர் முடிந்தளவு நீண்ட நேரம் துள்ளாமலும் கழுத்தெலும்பு முறியாமலும் சிரமமின்றி அனுப்பிவைப்பதை தனது கடமையாக கொண்டிருந்திருக்கிறார்.பணி ஓய்வுக்கு பிந்தைய நாட்களில் குற்றவுனர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமயங்களில் அவரது மாஷ் (ஆசிரியர்) உடனான உரையாடல் அவருக்கு சிறிது மன நிம்மதியை கொடுத்திருக்கிறது.அது பற்றியும் அவர் நினைவு கூர்கிறார்.

அவரது குறிப்புகளில் சில

மரணதண்டனை அளிக்கப்பட்ட நபர் அதிகாலை அழைத்துவரப்படுகிறார்.முந்தைய இரவு அவர் விரும்பும் உணவு அவருக்கு அளிக்கப்படுகிறது கடைசி இரவு தான் விரும்பிய உணவை அவர் சாப்பிடலாம் சூப்ரன்ட்டேன்டின் உணவையே தண்டனை அளிக்கப்பட உள்ளவருக்கும் வழங்கும் மரபு உள்ளது.அப்போதைய சூப்பிரண்டெண்டின் நேர்மை மிகுந்த ராகவன் நாயர் ஒரு நாள் தூக்குக் கைதியிடம் 'இறுதி உணவாக என்ன சாப்பிடுகிறாய்' என்று கேட்டதிலிருந்து இந்த மரபு தோன்றியது கைதி "இரவு எஜமான் என்ன சாப்பிடுறீங்களோ அதையே நானும் சாப்பிட விரும்புகிறேன்.

கைதியின் விருப்பத்தை உணர்ந்து கொண்ட ராகவன் நாயர் வீடுக்கு சென்று மனைவியிடம் வழக்கத்தைவிட நன்றாக ஒரு விருந்தாளிக்கு சமைப்பது போல் சமைத்து அதில் ஒரு பகுதியை சிறைக்கு அனுப்பி வைக்கும்படி சொன்னார்.இந்த வழக்கம் பின்னாளில் ஒட்டிக்கொண்டது.பின்பு தனது சொந்த மேசையிலிருந்து ஒரு வேலை உணவு அளிப்பதற்கு சிறை அதிகாரிக்கு ஒரு சிறிய தொகை வெகுமதியாக அளிக்கும் அளவிற்க்கு சென்றது.

அடுத்த முறை தூக்குமேடை பகுதியில் நுழையும் போது முதலில் என் கண்களில் படுவது பழைய அழுக்கேறிய மரப்பலகைகளான பொறிக்கதவின் மையத்திலுள்ள இருண்ட இடமாகத்தானிருக்கும்.ஆயிரம் ஜோடிக்காலடிகள் இறுதியாக அடிவைத்த இடம் அது.அந்த இடத்திற்கு வந்தர்க்கான வந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.ஆனால் அங்கிருந்து இறங்கிப்போனதற்கு எந்த அடையாளமும் இல்லை.அதனால் அந்த இடம் என் மனக்கண்ணில் தெளிவாக தெரிகிறது.

இறந்து போனவங்களோட உடம்பக்கூட பாக்க பயப்படுற ஆளு நான்.அதுலையும் தற்கொலை செய்துகிட்டவிங்களை நான் பாக்கவே மாட்டேன் அவ்வளவு பயம்.அப்படி இருந்ததாலயோ என்னவோ இவரோட வேலை இவரோட மனத்துயரம் இதையெல்லாம் உணரமுடியுதோ என்னவோ.நேரடியாக தமிழில் வெளிவந்திருக்க வேண்டியநூல் ஒரு மலையாளியின் முயற்சியால் ஆங்கிலத்தில் வந்து முருகவேள் அவர்களின் உழைப்பால் உன்னதம் பதிப்பகத்தார் தமிழில் வழங்கிருகிறார்கள்.

வெளியீடு : உன்னதம்,ஈரோடு
விலை : 140
தொடர்புக்கு:கௌதமசித்தார்த்தன்-9940786278

பல பேர்த்தோட ரிங் டோனா இந்தப்பாட்டு இருந்தது அவனுகள்ட்ட இரு வரிகள் மட்டும் தான் இருந்தது.இன்று தான் அக்கரை சிங்கம் விவசாயி இளா அவரு பதிவுல இருந்து இந்தப்பாட்ட சுட்டேன்.நன்றி இளா.



என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு…ஓஹ்
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதைச் சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்..
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்..
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)

யாரோ? உன் காதலில் வாழ்வது யாரோ?
உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ?
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ?
ஒரு பகல் என்னை சுடுவது ஏனோ?
என் தனிமையின் அவஸ்த்தைகள் தீராதோ?

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே!
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)

பாடலை டவுன் லோட் செய்ய

எஸ்ரா அவர்களின் வலைப்பதிவில் சுட்ட குறும்படம் இதில் எனக்குப்பிடித்த இரு படங்கள்.ஏற்கனவே மஜீத் மஜித்தின் சில்ட்ரன் ஆப் ஹெவன்,பரன்,கலர் ஆப் பேரடைஸ் இம்மூன்று படங்களை பார்த்த பிறகு அவருக்கும் ரசிகனானேன்.




தொடுப்பு



தொடுப்பு

நன்றி எஸ்ரா.






அழகான நல்ல படங்களுக்கு மத்தியில் திருஸ்டிக்கு நம்ளுது ஒன்னு

இதுவும் செழியன் அவர்களின் உலக சினிமாவில் வாசித்த ஸ்பெனிஷ் மொழிப்படம் வெகுநாட்களுக்கு பிறகு காணக்கிடைத்தது



ஒரு வயதான பெண் மற்றும் ஒரு இளம் பெண் இருவறும் சோகமாக நடனமாட மேடையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நாற்காலிகளை அவர்கள் நடனமாடுவதர்க்கேர்ப்ப ஒருவர் ஒழுங்கு படுத்துவார்.அந்நாடகத்தை பார்வையிடும் பார்வையாளர்களில் ஒருவர்(மார்கோ) அழுதபடியே பார்த்துக்கொண்டிருப்பார்.அவரையும் நாடகத்தையும் ஒருசேர பார்த்துக்கொண்டிருப்பார் பெனிங்னியோ மார்டின்.அங்கே மார்கோவிடம் பேசலாம் என்றெண்ணி பேசாமல் திரும்பிவிடுவார்.

லிடியா எனும் காளை சண்டையில் கலந்துகொள்ளும் பெண் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது மார்கோவிற்கு.இருவரும் ஒருமுறை வெளியில் செல்லும் போது லிடியா மார்கோவிடம் பேச வேண்டும் என்று கூறுவர் ஒரு காளை அடக்கும் போட்டியில் பங்கு பெரும் லிடியா மாடு மோதியதால் மருத்துவமனையில் கோமா நிலையில் சேர்க்கப்படுகிறார்.



பெனிங்னியோ மார்ட்டின் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிவார்.அங்கே பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் தனது நோயாளியான அலிசியாவிடம் தான் பார்த்த நாடகத்தை விவரித்து சொல்லுவார்.அப்படியே தன்னருகில் இருந்த மார்கோ அழுத்தத்தை பற்றியும் தான் மார்கோவிடம் பேச விரும்பியதையும் கூறுவர்.

அலிசியா இருக்கும் அதே மருத்துவ மனையில் லிடியாவும் சேர்க்கப்படுகிறார்.அங்கே பெனிங்னியோவையும் அலிசியாவையும் மார்கோ சந்திக்கிறார்.மார்கோவுக்கும் பெனிங்னியோவுக்கும் நட்பு ஏற்ப்படுகிறது.ஒருமுறை அலிசியாவுடன் பெனிங்னியோ பேசிக்கொண்டிருப்பதை மார்கோ பார்ப்பார்.அதற்கு பெனிங்னியோ கோமாநிலையில் இருந்தாலும் அவர்களுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும் என்பதோடு மார்கோவையும் லிடியாவுடன் பேசச்சொல்லுவார்

ஒருமுறை அலிசியாவிற்ககு பெனிங்னியோ பணிவிடை செய்யும் போது அலிசியாவின் தந்தை உள்ளே வருவார்.தன் பெண்ணிருக்கு ஒரு வாலிபன் சிகிட்சை அளிப்பதை அவர் விருப்பமில்லாத அவரிடம் சில பொய்களை சொல்லுவார் பெனிங்னியோ.



படத்தின் ஆரம்பத்தில் நடனம் ஆடிய அந்த வயதான பெண்மணி அவ்வப்போது வந்து அலிசியாவை பார்த்துவிட்டு செல்லுவார்.அப்போது மார்கோ பெனிங்னியோவிடம் அவரைப்பற்றி கேட்பார். நான்காண்டுகளுக்கு முன் நடந்த வற்றை விவரிப்பார். பெனிங்னியோவின் வீட்டின் எதிரில் இருக்கும் நடனப்பள்ளியில் நடனம் பயிலுவார் அலிசியா தினமும் அவரை தன் வீட்டு ஜென்னல் வழியே தினமும் பார்த்துக்கொண்டிருப்பார்.ஒருநாள் அவர் தவறவிடும் பர்சை எடுத்துக்கொடுப்பார் அலிசியாவிடம்.அதுவரை பெனிங்னியோ யார் என்பதே அலிசியாவுக்கு தெரியாது.அப்போது ஓரிரு வார்த்தைகள் அலிசியாவிடம் பேசுவார்.தனக்கு உலகம் சுற்றுவதிலும் சைலன்ட் மூவி பார்ப்பது பிடிக்கும் என்கிறார் .அல்சியாவை காண்பதற்காக வீட்டிலேயே கிளினிக் வைத்திருக்கும் அலிசியாவின் சைகாலஜிஸ்ட் தந்தையிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அவரை சந்தித்துவிட்டு அலிசியாவின் அறைக்குள் நுழைகிறான். அவன் வெளியே வரும்போது அவரை அங்கு காணும் அலிசியா அதிர்ச்சியடைகிறார்.அலிசியாவின் கிளிப்பை அங்கிருந்து எடுத்து வந்த விடுவார்,அடுத்தநாள் அலிசியா பள்ளிக்கு வருவார் என்று தன் வீட்டு ஜன்னலருகில் காத்திருப்பார்.மருத்துவமனைக்கு வரும் பெனிங்னியோ விபத்தில் சிக்கி கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் அலிசியா.அன்றிலிருந்து நான்காண்டுகளாக ஒருதலையாக அலிசியாவை காதலித்து வருவார் பெனிங்னியோ.அலிசியாவிருக்கு பிடித்த உலக நாடுகள் பற்றிய செய்திகளையும்,சைலன்ட் மூவி படங்களையும் பார்த்துவந்து கதை சொல்லிக்கொண்டிருப்பார் பெனிங்னியோ.



பெனிங்னியோ சொன்னபாடி மார்கோவும் லிடியாவிடம் பேசிவருகிறார்.ஒருநாள் அங்குவரும் லிடியாவின் பழைய காதலன் மார்கோவிடம் அவரும் லிடியாவும் கல்யாணம் செய்வது பற்றி முடிவெடுத்ததைப்பற்றி கூறுகிறார்.அப்போதுதான் லிடியா தன்னிடம் இதைப்பற்றி பேசமுயன்றிருகிறார் என்பதை புரிந்து கொள்கிறார் அங்கிருந்து விலகுகிறார்.

ஒருநாள் வழக்கம் போல சிகிட்சை அளிக்க வருகிறார் பெனிங்னியோ.அன்று தான் பார்த்த சைலன்ட் மூவியின் கதையை பேசியபடி தனது பணியை தொடர முயலுகிறார்.
அந்த படத்தில் வரும் சில போர்னோ காட்சிகளை சொல்லியபடி.தனது மனநிலை இன்று சரிஇல்லை என்றும் கூறுவர்.

கோமாவில் இருக்கும் அலிசியாவை தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக மார்கோவிடம் சொல்லுகிறார் பெனிங்னியோ.தனது காதலியை பழைய காதலனுடன் விட்டுவிட்டு வருத்தத்துடன் வெளியேறும் மார்கோவிருக்கு பெனிங்னியோவின் பேச்சு கோவத்தை தூண்டுகிறது.இனிமேல் இவ்வாறு பேசவேண்டாம் என்று எச்சரிப்பதோடு மார்கோவும் விட்டுவிட்டு வந்த தனது உலகம் சுற்றும் பத்திரிகை பணியை தொடர சென்று விடுகிறார்.

கோமாவில் இருக்கும் அலிசியாவின் உடம்பில் ஏற்ப்பட்ட மாற்றத்தைப்பற்றி பெனிங்னியோவும் அவரது சக பெண் பணியாளரும் மேளிடத்திருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.அலிசியா கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது.யார் காரணம் என்று விவாதிக்கும் போது பெனிங்னியோவுக்கும் மார்கோவுக்கும் நடந்த விவாதத்தை தெரிவிக்கிறார் பெனிங்னியோவுடன் பணிபுரிபவர்.அலிசியா வேறு மருத்துவமனைக்கும் பெனிங்னியோ சிறைச்சாலைக்கும் அனுப்பப்படுகிறார்.

வெளிநாட்டில் இருக்கும் மார்கோ பத்திரிகையில் லிடியா இறந்த செய்தியை அறிகிறார்.மருத்துவமனிக்கு தொடர்புகொள்கிறார் அப்போது பெனிங்னியோ சிறையில் இருப்பது அவராது சக பெண் ஊழியர் மூலமாக தெரிந்துகொள்கிறார்.யாருமற்ற அந்த நண்பனை காப்பாற்றுமாறு வேண்டுகிறாள்.(இவறும் ஒருதலையாக பெனிங்னியோ வாய் காதலித்திருப்பார் போலும்)

ஸ்பெயின் திரும்பிய மார்கோ சிறையில் இருக்கும் பெனிங்னியோவை சந்திக்கிறார். பெனிங்னியோ தன் காதலி பற்றி அறிந்து வரும் படியும் அலிசியாவிருக்காக தான் தயார் செய்த தன்வீட்டில் தாங்கிக்கொள்ளும் படியும் வேண்டுகிறார்.அங்கு தங்கும் மார்கோ எதிரில் நடனப்பள்ளியில் அலிசியா அமர்ந்திருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைகிறார்.
.பெனிங்னியோவின் வக்கிலிடம் இதுபற்றி கேட்கிறார்.அவரும் அலிசியாவிருக்கு குழந்தை இறந்து பிறந்ததென்றும் அதனால் அவர் சுய நினைவுக்கு வந்ததையும் கூறுகிறார்.ஆனால் பெனிங்னியோவிடம் அலிசியா இறந்து விட்டதாக சொல்லப்போவதாக கூறுகிறார்.சரியென்று வீடு திரும்புகிறார் மார்கோ.மறுநாள் காலை தனது செல்லுக்கு வரும் தகவலை பார்த்து ஜெயிலுக்கு ஓடுகிறார் மார்கோ.தன் காதலி இல்லாத உலகத்தில் தனுக்கும் வாழ விருப்பமில்லை எனக்கூறி ஒரு கடிதம் எழுதி விட்டு தூக்கமாத்திரைகளை உண்டு இறந்து விடுகிறார் பெனிங்னியோ.அலிசியாவின் நினைவாக வைத்திருந்த கிளிப்பை பெனிங்னியோவின் கல்லறையில் வைத்து அஞ்சலி செலுத்துவார் மார்கோ.



ஒருநாள் நாடக நிகழ்ச்சிக்கு செல்லும் மார்கோ வழக்கம் அழுதுகொண்டு நாடகம் பார்க்கிறார் அதை பின்னாலிருந்து கொண்டு ஒரு பெண் பார்த்துக்கொண்டிருப்பார்.இடைவேளையின் போது.தன்னை பார்த்துக்கொண்டிரும் அந்தப்பெண்ணை திரும்பிப்பார்க்கிறார் மார்கோ.அதிர்ச்சி அடைகிறார்.தன்னை பார்த்துக்கொண்டிருந்தது அலிசியாவும் அவரது ஆசிரியையும் என்பதை அறிகிறார்.இடைவேளையில் மார்கோவை யாரென்று அறியாத அலிசியா நலமா என்று கேட்கிறார்.இதை பார்த்து அதிர்ச்சி அடையும் ஆசிரியையிடம் பெனிங்னியோ இறந்ததை தெரிவிக்கிறார் மார்கோ.இடைவேளைக்கு பின் நாடகம் தொடர அவ்வப்போது திரும்பி அலிசியாவை பார்த்தபடி இருக்கிறார் மார்கோ.பெரும் ஒளி அலிசியாவின் மீது படர படம் நிறைவடைகிறது.

2002 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் பெத்ரோஅல்மதோவர்.இவரைப்பற்றி அறிய எஸ்.ரா அவர்களின் இந்த வலைப்பதிவை பார்க்கவும்.

Visit the Site