இதுவரை இரு நாவல்களை மட்டுமே ஒரு நாளில் படித்துள்ளேன்.முதலாமாவது அமரர் சுஜாதா அவர்களின் கொலையுதிர்காலம்,சோளகர்தொட்டி.மூன்றாவதாக இந்த எரியும் பனிக்காடு.ஆங்கிலத்தில் Red Tea என்னும் பெயரில் திரு.பி.எச்.டேனியல் அவர்களால் 1969 ஆம் வருடம் எழுதப்பட்டது.இக்கதை 1920-30 இடைப்பட்ட காலங்களில் வால்ப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள (ஆனைமலை,டாப்சிலிப்,மூனாறு) பகுதிகளில் வெள்ளையர்கள் ஆட்சியில் நம்மவர்களுக்கு தேயிலைத்தோட்டங்களில் இருந்த நிலையை மிகத்துல்லியமாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.இந்நாவலை தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்த்துள்ளார்.


ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத் தொட்டாங்களில்
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்
நீங்கள் கதகதப்பாய் உறுஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேனீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்
-ஆதவன் தீட்சண்யா

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மயிலம்பாடி எனும் கிராமத்தில் வாழும் கருப்பன் மற்றும் குடும்பத்தார் வாழ்கின்றனர்.முப்பதுக்கும் மேற்ப்பட்ட வீடுகளை கொண்ட அக்கிராமத்தில் மிக மோசமான பஞ்சம் ஏற்ப்படுகிறது.ஊரில் ஏதும் வேலை இல்லாததனால் அருகில் உள்ள நகரமான கயத்தாருக்கு சென்று வேலை தேடுகிறார்.ஒருவேலையும் கிடைக்காத சலிப்பில் சங்கரபாண்டி என்பவரது அறிமுகம் கிடைக்கிறது.அவர் தான் மலையில் உள்ள எஸ்டேட்டில் மேஸ்திரியாக இருப்பதாகவும்.அங்கு வந்தால் நிறையா சம்பாதிக்கலாம் என்றும் சொல்கிறார்.தானும் முதலில் கூலிக்கு சென்று நாலைடிவில் மேஸ்திரியானதாகவும் அங்கு வேலைக்கு வந்தால் கருப்பனும் தன் மனைவியுடன் அங்கு வந்தால் அதுபோல சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்.கருப்பனை தனது ஏஜென்டிடம் அழைத்து சென்று கருப்பனுக்கும் அவர் மனைவுக்கும் சேர்த்து 40 ருபாய் முன்பணம் வாங்கிக்கொடுத்து வீட்டிருக்கு சென்று அவர்களிடமும் கலந்தாலோசித்து வந்து பதில் கூறுமாறு சொல்கிறார்.

கருப்பனும் தனது குடும்பமும் சாப்பிட்டு சில தினங்கலானதால் இன்றிரவாவது அம்மைக்கும் மனைவிக்கும் சாப்பிட வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார்.முதலில் அம்மாவும் மனைவியும் மறுக்கின்றனர்.மாலை நேரத்தில் ஒரு கோடங்கி அவர்கள் வீட்டருகில் வந்து நல்ல சகுனமாக சொல்லவும் அனைவரும் திருப்த்தி அடைகின்றனர்.அந்தக் கோடங்கி சங்கரபாண்டியிடம் சென்று பணம் பெறுகிறார்.வள்ளிக்கு விருப்பமில்லை.இருந்தாலும் வறுமை காரணமாக ஒத்துக்கொள்கிறார்.

எவ்வளவு அழகான முகமுடி பூண்டிருக்கிறது
இந்த
நகரம்....
.
மர்சென்ட் ஆப் வெனிஸ்
-ஷேக்ஸ்பியர்
(இப்படி சிறு வரிகள் மூலமாக இந்த அத்யாயத்தில் நடக்கப்போவதை ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்)

இவர்களைப்போல் ஒரு குழுக்களையே திரட்டிக்கொண்டு இரண்டு நாள் பயனத்திருக்கு பின் பொள்ளாச்சி வழியாக வால்ப்பாறை வந்து சேருகின்றனர்.எஸ்டேட்க்கு வந்த பின்புதான் அவர்களுக்கு புரிகிறது.இங்கு வாழ்வது எளிதானதல்ல என்று.திரும்பியும் போக முடியாது அப்படிப்போவதானால் சங்கரபாண்டியிடம் பெற்ற முன்பணம் பயணச்செலவு பணம் மொத்தம் அறுபதும் கொடுத்துவிட்டுத்தான் செல்லவேண்டும்.அதனால் ஓராண்டு அங்கேயே வேலை பார்க்க வேண்டும்.இப்படி வந்தவர்களையெல்லாம் ஒரு லைன்னில் தங்க வைக்கப்படுகிறார்கள்.வாழவே தகுதி இல்லாத ஒரு இடத்தில் அவர்கள் அமர்த்தப்படுகிறார்கள்.பெண் பித்து பிடித்தலையும் வெள்ளையர்களின் ஆசைக்கு இணைக மறுப்பதால் வள்ளி படும் துயரங்கள் ஏராளம்.அவளது கூலி பணம் முதல் கொண்டு ஏமாற்றப்படுகிறது,

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மழை பொழிய ஆரம்பித்துவிடும் ஒரு மாதமானாலும் கூட மழை நிற்காமல் பெய்கிறது.அதன் கூடவே ரத்தை உருஞ்சும் அட்டைப்புளுக்களும் வரும்.எவ்வளவு மழை பெய்தாலும் குளிரடித்தாலும் புழுக்கள் கடித்தாலும் அவர்கள் வேலை வாங்கப்படுவர்.மழைக்கு பிறகு சற்றே இடைவெளி விட்டு ஒரு வகையான காய்ச்சல் பரவும் போதுமான மருத்துவ வசதி இல்லாததனால்.
வருடத்திற்கு பாதிபேர் இறக்க நேரிடுகிறது.இதற்க்கு பயந்து தப்பி செல்பாவர்களும் பாதிவழியிலேயே இறந்துவிடுவர்.இந்த சமயத்தில் கூட இவ்விரக்கம் மில்லாமல் கூலிகள் வேலை வாங்கப்படுவர்.

இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் தாமஸ் எனும் மருத்துவர் அங்கு பணியில் அமர்த்தப்படுகிறார்.அவர் படித்த மருத்துவர்.வெல்லையனைக்கண்டால் சூக்களை கலட்டி விட்டு தொப்பியை எடுத்துவிட்டு சலாம் துறை அவர்களே என்று சொல்லவேண்டும்.ஆனால் இவர் மட்டும் அப்படி செய்யவில்லை.மாறாக வெல்லையனைப்பார்த்து Good Morning Sir என்று கூறுவர்.இதை அவர்களால் ஜீரணிக்க முடியாது.இருந்தாலும் வேறு மர்த்துவர் இல்லாததால் அடங்கிப்போவர்

தாமஸ் அங்கு வேலையில் சேரும் நேரத்தில்.ஏற்க்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்த வள்ளி இப்போது மறுபடியும் கருவுற்றிரிப்பால்.அந்த சமயத்தில் காயிச்சலும் வேறு தாக்கியிருக்கும் இந்த மோசமான நிலையிலும் வள்ளி வேலைக்கு அனுப்பப்பட்டதால் நோயின் சீற்றம் மேலும் அதிகமாகிருக்கும்.நோய் குணமாக முன்பணமாக பத்து ருபாய் பெற்று மந்திரவாதியிடம் தாயத்து வாங்கி கட்டி மேலும் கடனாளி ஆகிருப்பன் கருப்பன்.இரண்டாண்டு அடிமை வாசத்திருக்கு பின்னர் அந்நோயிலிருந்து மீண்டு வள்ளியும் கருப்பனும் ஊர் வந்து சேர்ந்தார்களா என்பதே முடிவு.

அங்கிருக்கும் எழுத்தர்கள் பேசிக்கொள்வது போல பல தகவல்களை ஆசிரியர் நமக்குத்தருகிறார்.அப்பாவும் தாமசும் பேசும் போது அப்பாவு:இங்கிருக்கும் ஒவ்வொரு தேயிலை செடியிலும் மூன்று கூலிகளின் உயிர் அடங்கிருக்கிறது என்பார்.லண்டனிலிருந்த வெள்ளையர்கள் பணம் சம்பாதிக்க இங்க படிப்பறிவில்லாத ஏழைக் கூலிகளின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

புத்தகம்:எரியும் பனிக்காடு (Red Tea)
வெளியீடு :விடியல் பதிப்பகம்
விலை :150.

இந்த மாத புகைப்பட போட்டிக்கான எனது படம்.




குருவி

குருவி Vs தெலுங்கு சத்ரபதி.அந்த தெலுங்கு படத்துல இருந்து அப்படியே ஒரு காட்சி கூட உடாம அப்படியே தமிழ்ல பண்ணிருக்காங்க.இதுக்கு கம்முனு டப் பண்ணிருக்கலாம் நேரம் இருந்தா இதக்கொஞ்சம் பாருங்க.

PIT

இம் மாத புகைப்பட போட்டிக்கான படம்




அமரர் சுஜாதாவின்
விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பை படிக்கும் போது அதில் எனக்குப் பிடித்த ஒரு சிறுகதை.

பாண்டவர்களுடைய பன்னிரண்டு வருஷ வனவாசம் முடியும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சநாள் இன்னும் கொஞ்சநாள் என்று மறைந்து மறைந்து,மருகி மருகி சீற்றமெல்லாம் நேரம்வரக் காத்திருக்க அந்தக் கடைசி நாட்களில் இது நிகழ்ந்தது.


காட்டில் வாழ்ந்த ஓர் பிராமணனின் அரளிக்கட்டையின் மேல் ஒரு மான் உடலைஉராயிந்து விட்டு செல்லும் போது அதன் சிக்கலான கொம்பில் கட்டை மாடிக்கொண்டுவிட்டது.மான் ஓடிப்போய்விட்டது.

வேறு வேலை இல்லாத பாண்டவர்கள் மான் துரத்தும் பயிற்சி இல்லாததால் அந்த மான் இவர்களுக்கு தண்ணி காட்டியது.மான் எதோ மாய மான் போலும்.துள்ளிக்குதித்து ஓடிய மான் அவர்களை காட்டில் வெகு தொலைவில் அழைத்துக்கொண்டு போய் விட்டது.மானும் மறைந்தது.மானைக்கானமல் அதிகதூரம் ஓடியதனால் இவர்கள் ஐவருக்கும் ஏகக்களைப்படந்தனர்.

ஒரே தாகம்.ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.நாக்கு வறண்டு போனது.நகுலன் நொந்துகொண்டன்.ஒரு மானை பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம் என்ன ஒரு தாழ்ச்சி என வருந்தினான்.அதற்கு பீமன் திரௌபதியை துகிலுரித்த நீசர்கள் கொல்லாமல் பார்த்ததை விட இது தாழ்ச்சியா என்று தன் மூச்சிரைப்புக்கு இடைய சொன்னான்.அதற்கு அற்சுனணன் அந்த தேரோட்டியின் மகன் சொன்னதை கேட்டு சும்மா நின்றோம்.அதை விடவா என்றான்.


எல்லாரும் களைப்பினால் பொறுமை தைரியம் எல்லாம் இளந்திருப்பதை உணர்ந்த தர்மர் பேச்சை மாற்றுவதற்கு நகுலனிடம் சும்மா பேசிக்கொண்டே இருக்காதீர்கள்.இப்போது நம் எல்லோர்க்கும் தாகம்.நாகுலனை நோக்கி மரத்தின் மேல்யேறி எங்காவது நீர் தெரிகிறதா பார் என்று ஆணையிட்டான்.
நகுலன் ;ஏன் இவன் ஏறமாட்டானா நாந்தான் கேடச்ச்சனா என மொனகியபடி ஏறினான் சற்று தூரத்தில் நீர் இருப்பதை கண்டான்.அண்ணா பக்கத்தில்லான் இருக்கிறது என்றான் சற்று உற்சாகத்தோடு.

உடனே போய் நீர் எடுத்து வா நகுலன் தன் தாக மிகுதியால் அங்கே விரைந்தான்.அங்கு ஒரு அழகான பொய்கை இருந்தது.தன் தாக்கத்தை தனித்த பிறகு அம்புத்தூணியிலும் நீர் நிறைத்துக்கொள்ளலாம் என எண்ணியபடி பொய்கையில் இறங்கினான்.நிர்மலமான நீரில் கைவைத்ததும் 'நில் !" என்று ஒரு அசரீரி கேட்டது.நகுலன் சுற்றுமுற்றும் நோக்கினான்.
சாகசம் செய்யாதே இந்தக்குலம் என்னுடையது.நான் சில கேள்விகள் கேப்பேன் பதிலளித்துவிட்டு தண்ணீரைக் குடி,அந்தக்குரல் ஆகாய்த்திளிருந்தா,மரத்திளிருந்தா,எங்கிருந்து வருகிறது ?
நகுலன் திடுக்கிட்டான்,இருந்தும் ஒரே தாகம்.தண்ணீர் குடித்துவிட்டு பிறகு பதில் சொல்லலாம் என்று இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி பருகினான் கரை ஏறியதும் மயங்கி கீழே விழுந்தான்.
தர்மனுக்கு சென்றவன் திரும்பவில்லை என்ற கவலை சகாதேவனை அனுப்பி பார்த்துவரச்சொன்னான்.
சகாதேவன் சென்று நகுலன் விழுந்து கிடப்பதைப்பார்த்து திடுக்கிட்டான்.திரும்பிச்செல்கையில் குளத்த பார்த்தன்.தண்ணீரின் கவர்ச்சி,தாகம் இரண்டும் சேர்ந்து நீரை பருகத்தோன்டச்செய்தது.குளத்தின் அருகில் சென்றான்.
மீண்டும் அசரீரி "சகதேவா இது என் பொய்கை.என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு பிறகே தாகம் தீர்த்துக்கொள்ளலாம்.சகாதேவன் எச்சரிக்கையை புறக்கனித்தான்,நீரை பருகினான்,மயங்கி விழுந்தான்.

சாகதேவனும் திரும்பி வராது கண்டு கவலையடைந்த தர்மன் அருசுனணனை சென்று பார்த்துவச் சொன்னான்.அங்கு சென்று பார்க்கையில் இருவரும் மயங்கியநிலையில் இருந்தனர்.திடுக்கிட்டு பொய்கையை பார்த்தான்.அதை அணுகினான்.மீண்டும் அசரீரி முதலில் என்கேள்விகளுக்கு பதில்தா பின்பு நீரருந்தலாம்.இல்லையேல் உன் தம்பிகளுடன் நீயும் மடிவாய்"என்றது.அர்ச்சுனன் பதிலளிக்கும் முன் அவனை தாகம் ஆட்கொண்டது.நீரை பருகினான்,மயங்கி விழுந்தான்.

தர்மனுக்கு மூவரும் திரும்பி வராத கவலை,தாகம்.பின்பு பீமனை அனுப்பினான்.எல்லாமே நமக்கு விரோதமாக இருக்கிறது.ஜாக்கிரதை!.பீமன் விரைந்தான்.கிட்டத்தட்ட பீமனுக்கும் அதே கதிதான்.அவனும் மயங்கி விழுந்தான்.

நால்வரும் திரும்பி வராதது கண்டு கவலை கொண்டான் தர்மன்.பலவாரக சிந்தித்த படியாக குளத்தை அடைந்தான்.அங்கு நால்வரையும் கண்டான்.வனவாசம் முடியும் சமயத்தில் இப்படி ஒரு சோதனையா.யார் இப்படி செய்திருப்பார்கள்.அருகில் சென்று பார்த்தான்.உடலில் காயம் ஏதுமில்லை.உறங்குபவர்கள் போல் படுத்திருந்தனர்.ஒருவேளை இது துரியோதனன் சதியாக இருக்கும் என எண்ணியபடி பொய்கையை கண்டான்.தம்பிகளை பிறகு பார்க்கலாம்.முதலில் தாக்கத்தை தணிக்கலாம் என்று பொய்கையில் இறங்கினான்.அசரீரி என் பேச்சை கேளாமல் உன் தம்பிகள் தண்ணீர் பருகினார்கள்.நீயும் அப்படி செய்யாதே தர்மா.என்கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு பிறகு குடி.இது என் குளம்"என்றது.

தர்மனும் தாகத்தை பொருட்படுத்தாமல் சரி கேள் என்றான்.
வரிசையாக கேள்விக்கணைகளை தொடுத்தது.

எது தினமும் சூரியனை உதிக்கச் செய்கிறது ?
பிரம்மம்.
மனிதனுக்கு எப்போதும் துணை எது ?
தைரியம்.
பூமியைக்காட்டிலும் கனமானது எது ?
மக்களை தாங்கும் தாய்.
ஆகாயத்தைக்காட்டிலும் உயர்ந்தது எது ?
தந்தை.
அறிவை காட்டிலும் வேகமானது எது ?
மனம்..............
இப்படியாக தொடர்ந்து அது கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தான்.

தர்மனே! நீ எல்லாம் அறிவாய் என்பது தெரிகிறது.உனக்கு எதிர்காலமும் தெரியுமோ ?

தெரியும்.என்றான் தருமன்

உன் பதில்கள் என்னை திருப்திபடுத்திவிட்டது .உன் சகோதரர்களில் ஒருவன் பிழைக்ககூடும்.நீ யாரை விரும்புகிறாயோ அவன் பிழைப்பான்!.என்றது அசரீரி.

தருமன் யோசித்தான்."அசரீரியே!,யாரும் பிழைக்க வேண்டாம்" என்றான்.

என்னது?" என்று திடுக்கிட்டது அந்தக் குரல்

அர்ப்பனே ! நான் எல்லாம் அறிவேன்.எதிர்கால விஞ்ஞானமும் ரசாயனமும் எனக்கு அத்துப்புடி.என் சகோதரர்கள் இறக்கவில்லை.மயக்கத்தில் இருக்கிறார்கள்.நான் சுனையில் இறங்கிய போதே தெரிந்து கொண்டேன்.சுனையருகில் மிக லேசாக கார்பன் மானாக்ஸைடு இருக்கிறது.மேலும் சுனை தண்ணீரில் லேசாக தாயோ மெண்ட்டோன் கலந்திருக்கிறது.இவை மிகக்குறைந்த அளவில் கலந்திருப்பதால் உயருக்கு ஆபத்தில்லை.கரைக்கு வந்து நல்ல காற்றை சுவாசித்தால் போதுமானது.தேவை என்றால் டெக்ஸ்ட்ரோஸ் அதிகப்படியாக உள்ள சில பழங்களை கொடுத்தால் குணமாகிவிடுவார்கள்.மரத்தில் ஒளிந்து கொண்டு வெவ்வேறு திசைகளில் குரல் கொடுக்கப் பழகிய அசரீரியே,உன் கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தன.நன்றி"என்று சொல்லிவிட்டு தன் சகோதரர்களை பார்க்க சென்றான்.

-ராஜாஜியின் 'வியாசர்விருந்து'
புத்தகம் :விஞ்ஞானச் சிறுகதை

Visit the Site