சமீபத்தில் கேட்ட பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.
திரைப்படம்:சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லயே இதில் ஓசை இல்லயே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்
கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உன்னை இன்றி வேறோர் நினைவில்லை
இனி இந்த ஊணுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வாழ
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லயே இதில் ஓசை இல்லயே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே.
நன்றி.
பண்புடன்
9 பின்னூட்டம்:
?????????
enakkum migavum pidiththa paadal idhu karthik...
ingu pakirndhu kondamaikku nanri nanbaa..
(sorry dude..tamil font velai seyyalai )
நன்றி தியாகு
நன்றி ரிஷான்.
நல்ல பாடல் :)
thank u sathish
arumayana padivugal
அற்புத வரிகள்....அழகிய படமாக்களால் கவிதைத்துவம் மேலோங்கி அமைந்த இயல்பான பாடல்!!
Super Song Machiee..
Post a Comment